யோசுவா 15:17-37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

17. அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

18. அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.

19. அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

20. யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:

21. கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

22. கீனா. திமோனா, ஆதாதா,

23. கேதேஸ், ஆத்சோர், இத்னான்,

24. சீப், தேலெம், பெயாலோத்,

25. ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,

26. ஆமாம், சேமா, மொலாதா,

27. ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,

28. ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,

29. பாலா, ஈயிம், ஆத்சேம்,

30. எல்தோலாத், கெசீல், ஒர்மா,

31. சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,

32. லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

33. பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,

34. சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

35. யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

36. சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.

37. சேனான், அதாஷா, மிக்தால்காத்,

யோசுவா 15