யாத்திராகமம் 40:24-28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

24. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,

25. கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.

26. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,

27. அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.

28. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,

யாத்திராகமம் 40