13. ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14. ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15. புன்னி, அஸ்காத், பெபாயி,
16. அதோனியா, பிக்வாய், ஆதின்,
17. ஆதேர், இஸ்கியா, அசூர்,
18. ஒதியா, ஆசூம், பெத்சாய்,
19. ஆரீப், ஆனதோத், நெபாய்,
20. மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21. மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
22. பெலத்தியா, ஆனான், ஆனாயா,
23. ஓசெயா, அனனியா, அசூப்,
24. அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
25. ரேகூம், அஷபனா, மாசெயா,
26. அகியா, கானான், ஆனான்,
27. மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
28. ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,
29. தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
30. நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும்,