நீதிமொழிகள் 16:30-32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

30. அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.

31. நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.

32. பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் 16