எண்ணாகமம் 1:2-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்,

3. இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.

4. ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.

5. உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

6. சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.

7. யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.

8. இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.

9. செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.

10. யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.

11. பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.

12. தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் குமாரன் அகியேசேர்.

13. ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.

14. காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.

15. நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.

16. இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.

17. அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு,

18. இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.

எண்ணாகமம் 1