5. ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
6. அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
7. பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
8. காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9. அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10. சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,
11. அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,